சகுனம் - 3

தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,
தவசி, சந்நாசி, தட்டான்,
தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,
தட்டைமுடி, மொட்டைத் தலை,
கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,
கதித்ததில தைலம், இவைகள்
காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,
கனி, புலால் உபய மறையோர்
நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை
நாளும்வண் ணான்அ ழுக்கு
நசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்
நாடியெதிர் வரநன் மையாம்;
அலைகொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!