நற்பொருளிற் குற்றம்

பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்
பேனமே தோட மாகும்!
பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமே
பெரிதான தோட மாகும்!
சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்ற
சீற்றமே தோட மாகும்!
தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்று
செய்வதவர் மேல்தோ டமாம்!
தாராள மாமிகத் தந்துளோர் தாராமை
தான்இரப் போர்தோ டமாம்!
சாரமுள நற்கருப் பஞ்சாறு கைப்பதவர்
தாலம்செய் தோட மாகும்!
ஆராயும் ஒருநான் மறைக்கும்எட்டாதொளிரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!