மனை கோலுவதற்கு மாதம்

சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்
செல்வம்உண் டதினும் நலமே
சேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்
தீயிட்ட தானி யாகா;
வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்
வீறல்ல; ஆவ ணிசுகம்;
மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;
மேன்மையுண் டைப்ப சிக்கே;
உத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில்
ஓங்குபா ரதம்வந் தநாள்;
உயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம்
உம்பர்கோன் உண்ட தாகாது;
அத்தநீ! மாரனை எரித்தபங் குனிதானும்
ஆகுமோ! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!