விருந்து வாரம்

செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்
செய்யொணா துண்ணொ ணாது;
திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்
செவ்வாய் விருந்த ருந்தார்;
பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்
பொன்னவற் கதிக பகைஆம்;
புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்
போனவுற வுந்தி ரும்பும்;
மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்
மனமொத் திருந்த இடமே
வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ
வாய்த்தநாள் என்ற றியலாம்;
அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!