பூப்பு வாரம்

bookmark

அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக் 
      கானகற் புடைய ளாவாள்; 
அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி 
      அளவில்பைங் குழவி பெறுவாள்; 
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு 
      சிறுவரைப் பெற்றெ டுப்பாள்; 
சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்; 
      திருவுமுண் டாயி ருப்பாள்; 
கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்
      காரிவா ரத்தி லாகில்; 
களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார 
      காலபலன் என்று ரைசெய்வார்; 
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே! 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!