பூப்பு வாரம்

அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்
கானகற் புடைய ளாவாள்;
அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி
அளவில்பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;
சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;
திருவுமுண் டாயி ருப்பாள்;
கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்
காரிவா ரத்தி லாகில்;
களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார
காலபலன் என்று ரைசெய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!