
எல்லோரையும் விட நல்ல மாப்பிள்ளை

சரயு ஆற்றங்கரையில் ஒரு யாசகனும் அவன் மனைவியும் வசித்து வந்தார்கள். சிறிய குடிசை ஒன்றில் வசித்துக்கொண்டு, எளிமையான துணிகளை உடுத்துக்கொண்டு, பக்கத்துக் கிராமங்களில் மக்கள் கொடுப்பதை உண்டு, அவர்கள் திருப்தியுடன் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் இந்தத் திருப்திக்கு ஒரு குறையாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. . யாசகனும், பக்கத்துக் கிராமங்களில் யாராவது ஒரு குழந்தை தத்து கொடுப்பார்களா என்று வீட்டுக்கு வீடு கேட்டுப் பார்த்தான். அந்த ஏழைகளுக்கு ஒரு குழந்தையை தத்துக் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
யாசகனிடம் பணம் இல்லை என்றாலும் சில அமானுஷ்ய சக்திகள் இருந்தன. ஒருநாள் அவன் குடிசைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தபோது, உயரே பறந்த ஒரு காக்கையின் மூக்கிலிந்து ஒரு சுண்டெலி இழே விழுந்தது. மனைவி அதை எடுத்துக் கருணையுடன் தடவிக் கொடுத்தாள்.
பிறகு தன் கணவனைப் பார்த்து, என்றாள். உன் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், என்று அவனும் புன்முறுவலுடன் ஒத்துக் கொண்டான்.
ஏதோ மந்திரத்தை உச்சரித்து, கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தைச் சுண்டெலி மேல் தெளித்தான். அவ்வளவுதான், அது ஒரு அழகிய பெண் குழந்தையாய் மாறிவிட்டது. மனைவியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள். குஞ்சு எலிக் குழந்தைக்கு குஞ்சலி என்று அருமையுடன் பெயர் சூட்டி சீராட்டி வளர்த்தார்கள்.