பொருள்செயல் வகை

bookmark

புண்ணிய வசத்தினாற் செல்வமது வரவேண்டும்; 
      பொருளைரட் சிக்க வேண்டும் 
புத்தியுடன் அதுவொன்று நூறாக வேசெய்து 
      போதவும் வளர்க்க வேண்டும்; 
உண்ணவேண் டும்; பின்பு நல்லவத் ராபரணம் 
      உடலில்த ரிக்க வேண்டும்; 
உற்றபெரி யோர்கவிஞர் தமர்ஆ துலர்க்குதவி 
      ஓங்குபுகழ் தேட வேண்டும்; 
மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச 
      வழிதேட வேண்டும்; அன்றி, 
வறிதிற் புதைத்துவைத் தீயாத பேர்களே 
      மார்க்கம்அறி யாக்குரு டராம்
அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும் 
      அழகன்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
---------