பொருள்செயல் வகை

புண்ணிய வசத்தினாற் செல்வமது வரவேண்டும்;
பொருளைரட் சிக்க வேண்டும்
புத்தியுடன் அதுவொன்று நூறாக வேசெய்து
போதவும் வளர்க்க வேண்டும்;
உண்ணவேண் டும்; பின்பு நல்லவத் ராபரணம்
உடலில்த ரிக்க வேண்டும்;
உற்றபெரி யோர்கவிஞர் தமர்ஆ துலர்க்குதவி
ஓங்குபுகழ் தேட வேண்டும்;
மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச
வழிதேட வேண்டும்; அன்றி,
வறிதிற் புதைத்துவைத் தீயாத பேர்களே
மார்க்கம்அறி யாக்குரு டராம்
அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
அழகன்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
---------