பூப்பு இலக்கினம்

வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்
மாறாது விபசா ரிஆம்;
வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்
வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்
சீர்பெறுவள் கன்னி யென்னில்;
செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்
தேளினுக் குத்; தனுசுஎனில்
நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;
நீள்மகரம் மான மிலளாம்;
நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ
நெடியபே ரறிவு டையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
அதுவென்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!