தீவும் கடலும்

நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவு
லட்சம்யோ சனை;இதனையே
நாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்
நற்கழைச் சாற்றின் கடல்;
மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்
மிகுமதுக் கடல்;அதனையே
விழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்
மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;
பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்; இங்கிதைப்
போர்ப்பது திருப்பாற் கடல்;
போவதது சூழ்தல்சான் மலிதீவம் ஆம்; தயிர்ப்
புணரிஅப் பாலும் அப்பால்
ஆவலுறு புட்கரத் தீவாம் இதைச்சூழ்வ
தரும்புனற் றருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!