தீவும் கடலும்

bookmark

நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவு 
      லட்சம்யோ சனை;இதனையே 
நாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்
      நற்கழைச் சாற்றின் கடல்; 
மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல் 
      மிகுமதுக் கடல்;அதனையே 
விழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின் 
      மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்; 
பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்; இங்கிதைப் 
      போர்ப்பது திருப்பாற் கடல்; 
போவதது சூழ்தல்சான் மலிதீவம் ஆம்; தயிர்ப் 
      புணரிஅப் பாலும் அப்பால் 
ஆவலுறு புட்கரத் தீவாம் இதைச்சூழ்வ 
      தரும்புனற் றருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!