மாணிக்கங்கள்

சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கான
துரகம்ஓர் மாணிக் கம்ஆம்;
சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள
துரையுமோர் மாணிக் கம்ஆம்;
பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய
பாவையோர் மாணிக் கம்ஆம்;
பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்
பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;
ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
உசிதனோர் மாணிக் கம்ஆம்;
உத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்
உடையனோர் மாணிக் கம்ஆம்;
அழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
கமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!