உண்டியிலையும் முறையும்

வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்தி
மாப்பலாத் தெங்கு பன்னீர்
மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசு
வனசம் செழும்பா டலம்
தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்
சகதேவம் முள்மு ருக்குச்
சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலை
தனினும்உண் டிடவொ ணாதால்;
தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்
சாதங்கள் பலஅ ருந்தல்
சற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி
தனக்கிடம் எனப்ப ருகிடார்;
ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன்
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.