உண்டியிலையும் முறையும்

bookmark

வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்தி 
      மாப்பலாத் தெங்கு பன்னீர் 
மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசு 
      வனசம் செழும்பா டலம்
தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம் 
      சகதேவம் முள்மு ருக்குச் 
சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலை
      தனினும்உண் டிடவொ ணாதால்; 
தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல் 
      சாதங்கள் பலஅ ருந்தல் 
சற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி 
      தனக்கிடம் எனப்ப ருகிடார்; 
ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன் 
      ஆகும்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே.