கவிஞர் வறுமை

bookmark

எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை 
      இணையிலாச் சேடன் என்றும்,
ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில் 
      இணையிலாக் கர்ணன் என்றும், 
அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை 
      அதிவடி மாரன் என்றும், 
ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை 
      ஆண்மைமிகு விசயன் என்றும், 
முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை 
      மொழிஅரிச் சந்த்ர னென்றும், 
மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர் 
      முறையின்றி ஏற்ப தென்னோ? 
அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே! 
      அமலனே! அருமை மதவேள்! 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!