மழைநாள் குறிப்பு

சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல
சீரான பரணி மழையும்,
தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்
சேரும்நா லாநா ளினில்
ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்
ஓங்கும்ஏ காத சியினில்
ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,
உண்டா யிருந்தாடியில்
பத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்
பகரும்ஆ வணிமூ லநாள்
பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்
பாரில்வெகு விளைவும் உண்டாம்;
அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்
அண்ணல் எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!