ஒண்ணாது

வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்
வாசலிற் செல்லொ ணாது;
வாதெவ ரிடத்திலும் புரியொணா தறிவிலா
மடையர்முன் நிற் கொணாது;
கொஞ்சமே னும்தீது செய்யொணா தொருவர்மேல்
குற்றஞ்சொ லொண்ணா தயல்
கோதையர்க ளோடுபரி காசஞ்செ யொண்ணாது;
கோளுரைகள் பேசொணாது;
நஞ்சுதரும் அரவொடும் பழகொணா திருள்வழி
நடந்துதனி யேகொணாது
நதிபெருக் காகின் அதில் நீஞ்சல்செய் யொண்ணாது;
நல்வழி மறக்கொணாது;
அஞ்சாமல் அரசர்முன் பேசொணா திவையெலாம்
அறியும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
---------