ஒரு வாய் பேரம்

ஒரு வாய் பேரம்

bookmark

ஒரு நாள் மனோகரமான மாலைப்பொழுதிலே முதியவன் ஒருவன் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தான். மாலையின் மோகனத்தைக் கூட்டுவதாய் இனிமையான கீதம் ஒன்று, ஒரு வீட்டுக்குள்ளேயிருந்து வந்தது. சொக்கிப்போன கிழவன், பாட்டு முடிகிறவரை பாதையிலேயே நின்று கேட்டான். 

பிறகு வீட்டருகே சென்று உள்ளே பார்த்தான். பாடியவள் ஒரு சின்னப்பெண். அன்புடன் அவளைத் தட்டிக்கொடுத்து, தங்கக்காசு ஒன்றை பரிசாகக் கொடுத்தான். பெண்ணின் தந்தை பொன்னன் அப்போது அருகே இருந்தான். நம் மகள் பாடிய பாட்டுக்கு தங்கக் காசா! என மகிழ்ந்தான்.

உடனே பெண்ணின் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டான். பிறகு கிழவன் புறப்படத் துவங்கியதும், “நில்லும் ஐயா, எனக்குச் சேரவேண்டிய பாக்கி எங்கே?” என்று பொன்னன் கத்தினான். வயோதிகன் வியப்பு மிகுதியுடன் அவனைப் பார்த்தான். அவன் மேலும் சொன்னான், “இதோ பார்,கிழவனாரே.. என் பெண்ணின் பாட்டைக் கேட்டு மகிழ்வதற்கு விலை, ஒரே ஒரு தங்கக் காசு இல்லை.பத்து காசுகளாக்கும். பாக்கியைக் கீழே வை நீ சீக்கிரம்” என்றான். இந்த ஆள் ஒரு போக்கிரி என்பதைப் புரிந்து கொள்ள கிழவனுக்கு அதிக நேரம் ஆகவில்லை. 

இருந்தாலும் அப்பாவி போல் நடித்துக் கொண்டு, “

“ என்றான் கிழவன். 

 என்றான் பொன்னன்.

“அதெல்லாம் வேண்டாம். இதோ, மூன்று மைல்தான் என் வீடு” என்றான் முதியவன். பொன்னன் தான் வாங்கிய தங்கக் காசை அவனிடமே திருப்பித் தந்துவிட்டு, நூறு காசுகளை வாங்கிக் கொள்வதற்காக அவனோடு போனான். 

மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருந்த பொன்னன் வழியெல்லாம் என்னென்னவோ பிதற்றிக் கொண்டே போனான். சந்தோஷம் தாங்காமல் வெடித்தே விடுவான் போல் இருந்தது பொன்னனுக்கு. “நூறு தங்கக் காசுகளை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்வேன், தெரியுமா? ” என்று கேட்டான்.