பயனிலாதவை

சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்
சார்பொழுது இலாத கிளைஏன்?
சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவரு
சமரத்திலாத படைஏன்?
விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்
வேளைக்கிலாத சுடர்ஏன்?
வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்
வேளைக் கிலாத கலைஏன்?
தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?
சரசத் திலாதநகை ஏன்?
சாம்மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?
தரணிமீ தென்பர் கண்டாய்!
அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத
ஆதியே! அருமைமத வேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!