மறையோர் சிறப்பு

bookmark

ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி 
      ஒன்றுதப் பாது புரிவார்; 
உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம் 
      ஒருமூன்றி னுக்கும் மறவா 
தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும் 
      அதிதிபூ சைகள்பண் ணுவார்; 
யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம் 
      இன்றியே செய்து வருவார்; 
பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே 
      பிழையா திருக்கும் மறையோர் 
பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும் 
      பேசுதற் கரித ரிதுகாண்! 
ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும் 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!