வணிகர் சிறப்பு

bookmark

நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்! 
      நெடிதுதூ ரந்தி ரிந்தும் 
நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி 
      நீள்நிலத் தரசு புரியும் 
வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்; 
      வருமிடம் வராத இடமும் 
மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட 
      வளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும் 
ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர் 
      அளவில்பற் பலச ரக்கும் 
அமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும் 
      அறவிடார்; செலவு வரிலோ 
ஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர் 
      அருள் வைசியர்! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!