வேளாளர் சிறப்பு

bookmark

யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர் 
      இயற்றிநல் லேர்பெ றுவதும், 
இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண் 
      டென்றும்நல் லேர்பெ றுவதும், 
வசனாதி தப்பாது தனதா னியந் தேடி 
      வசியர்நல் லேர்பெ றுவதும், 
மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக 
      வளமைபெற் றேர்பெ றுவதும், 
திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை 
      செய்யுநல் லேர்பெ றுவதும், 
சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர் 
      செய்யும்மே ழிப்பெ ருமைகாண் 
அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!