தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்

தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,
சாலமேல் வருக ருமமும்
தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்
தானாதி பதியா குவான்;
மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,
வாழ்குடி படைத்தி றமையும்,
மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்
வளமான மதிமந் திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,
தோலாத வெற்றியும் திடமான சித்தியுள
சூரனே சேனா திபன்
அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!