சீற்றத்தின் கொடுமை

bookmark

கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை! 
      கோபமே குடிகெ டுக்கும்! 
கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது! 
      கோபமே துயர்கொ டுக்கும்! 
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு! 
      கோபமே உறவ றுக்கும்! 
கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி! 
      கோபமே கருணை போக்கும்! 
கோபமே ஈனமாம் கோபமே எவரையும் 
      கூடாமல் ஒருவ னாக்கும்! 
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர 
      கக்குழி யினில்தள் ளுமால்!
ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும் 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!