பல்துறை

bookmark

தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர் 
      தங்களுக் கவைத ழுவுறா! 
சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய் 
      தயவிலோர் ஆயுள் பெருகார்! 
மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால் 
      வீடுநற் செந்நெல் இவைகள் 
வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர் 
      விலைகொடுத் தேகொள் ளுவார்! 
தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும் 
      தீண்டரிய நீசர் எனினும் 
சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர் 
      சீலமுடை யோர்என் பரால்! 
ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே! 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!