முப்பொருள் (தத்துவத் திரயம்)

பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்
பொருந்துமிந் திரிய மைந்தும்,
பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
புகலரிய கரணம் நான்கும்,
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;
உயர்கால நியதி கலையோ
டோங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை யென்
றுரைசெய்யும் ஓரே ழுமே
தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்
திகழ்சுத்த வித்தை ஈசன்,
சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே
சிவதத்வம் என்ற றைகுவார்;
ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.