முப்பொருள் (தத்துவத் திரயம்)

bookmark

பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம் 
      பொருந்துமிந் திரிய மைந்தும், 
பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
      புகலரிய கரணம் நான்கும், 
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்; 
      உயர்கால நியதி கலையோ 
டோங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை யென் 
      றுரைசெய்யும் ஓரே ழுமே 
தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால் 
      திகழ்சுத்த வித்தை ஈசன், 
சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே 
      சிவதத்வம் என்ற றைகுவார்; 
ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய் 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே.