அலைகளுடன் சிவலோக பயணம்

அலைகளுடன் சிவலோக பயணம்

bookmark

ரு கடலோரத்தில் காதல் ஜோடிகளின் கூட்டம் பார்க்கும் இடமெல்லாம் பறவையின் சிறகுகள் போல பரவசமாக பறந்து காணப்படும் அக்காதலர்களின் ஒரு கூட்டத்தில் தனிமை காதலனாக கனவு காணும் ஒரு ஆண்!...

தன் கனவை நிறைவேற்ற வழி தெரியாமல் தவித்து நிற்கும் அவன்,யாரிடம் வழி கேட்க போகிறான்… என்று உங்களுக்கு தெரியுமா? வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். வாருங்கள் இச்சிறு கதையின் மூலம் அவன் கனவு நிறைவேறுமா? நிறைவேறாதா? என்று காண்போம்.  

ஒரு நாள் எப்போதும் போல தன் கனவை நினைத்து பல யோசனைகளுடன் கடற்கரையோரம் அத்தனிமை காதலன் அமர்ந்தான். திடீரென ஒரு சத்தம் யாரோ அவனை அழைப்பது போல… அச்சமுற்று முன்னும் பின்னும் சுற்றி பார்க்கிறான்.

அங்கே காதல் ஜோடிகளும் இல்லை, கடலை விற்பவர்களும் இல்லை. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வீடு திரும்ப முயன்றான்.

பயப்படாதே தனிமை காதலா!.. நான் தான் கடல் அலை பேசுகிறேன் என்று ஒரு குரல் அவன் காதின் வழி பாய்ந்தது. உடனே அவன் கனவு கனவு என்று நாம் யோசித்து ஒரு  வேளை பைத்தியம் ஆகிட்டோமோ என்று நினைத்து தன் மனதிற்குள்ளையே புலம்பல் செய்கிறான். இது ஒன்றும் பொய் அல்ல …நீ காண்பதெல்லாம் உண்மை தான் என்று கூறுகிறது கடல் அலைகள்.

என்று சொல்லி விட்டு அவனிடம் உன் கனவுகளை என்னிடம் சொல் என்னால் முயன்ற உதவியை நான் உனக்கு செய்கிறேன் என்று கூறியது கடல் அலைகள். அத்தனிமை காதலனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கிறான்.

இந்த காலத்தில் மனிதர்களே ஒருவருக்கொருவர் உதவி செய்ய முன் வருவதில்லை, இதில் நீ எப்படி எனக்கு உதவி செய்வாய் என்று வினா எழுப்பினான்.

உடனே அலைகள் நீ ஒன்று என்னிடம் சொல் அது  என்னால் முடிந்தால் மட்டும் நீ என்னை நம்பலாம் என்று கூறியது.

உடனே அத்தனிமை காதலன் கடல் அலைகளிடம் இருந்து கொஞ்சம் தூரம் நகர்ந்து அமர்ந்து  கொண்டு உன்னால் முடிந்தால் என் பாதத்தை உன் அலைகளால் என்னை தொட்டு செல் என்றான்.இதை கேட்ட அலைகள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி வேகமாக அலையடித்து அவன் இரு பாதங்களையும் தொட்டுச் சென்றன.

அமர்ந்திருந்த அவன் திடீரென எழுந்து ஆச்சரியமாக அலைகளை பார்த்து ரசித்து சிரிக்க தொடங்கினான்.

பின்பு அவனுக்கு கடல் அலையின் மேல் அதீக காதலும், நம்பிக்கையும் ஏற்பட்டன. அப்புறம் அலைகளை தன் உறவாய் ஏற்றுக் கொண்டு தன் கனவை கூற தொடங்குகிறான் ஒரு சிறு கவிதை வரிகளுடன்.

உடனே அலைகள் நீ சொல்வது ஏதும் எனக்கு புரியவில்லை தனிமை காதலனே! நீ கூற வருவதை எனக்கு புரியும் வடிவில் கூறுவாய் என புலம்பியது.

‘சொல்கிறேன் கேள் சகியே’ என்றான் .

இந்த உலகத்தில் தன் கனவு பயணத்தை நோக்கி  எல்லாரும் போராடுகிறார்கள். சிலருக்கு எல்லாம் இருந்தும் உதவி செய்ய மனம் இல்லாமல்   சுயநலமாக தன் பயணத்தை மேற்கொள்கிறார்கள். சிலர் ஆசை, கனவு இதெல்லாம் இருந்தும் அதையெல்லாம் வெளிபடுத்த முடியாமல் மற்றவர்களின் கனவை நிறைவேற்ற துடிக்கும் நல்ல உள்ளங்கள்.

இந்த சுயநலம் உலகத்திலும் தன் கனவு நிறைவேறாமல் போனலும் பரவாயில்லை மற்றவர்களின் சந்தோசம் தான் தனக்கு நிம்மதி என்று சிலர் நினைக்கிறார்கள். அதை எண்ணையில் பெருமையாக இருக்கிறது என்றான்.

உடனே அவன் அலைகளிடம் உனக்கு என்ன? உன்னை நேசிக்க இந்த உலகத்தில் ஆயிரம் கோடி மக்கள் உன்னை பார்க்க நாள் தோறும் வருகிறார்கள். இதுக்கெல்லாம் என்ன காரணம், உன் மேல் எவ்வளவு நம்பிக்கை, ஆசையிருந்தால் இப்படி உன்னை பார்க்க வருவார்கள்.

அவன் சொன்னதை கேட்டவுடன் அலைகள் புயல் வேகத்தில் வீசி கல கலவென சத்தத்துடன் சிரிக்க ஆரம்பித்தது. ஏன் அவ்வளவு மகிழ்ச்சி எனக்கும் சொன்னால் நானும் சிரித்து மகிழ்வேன் சகியே என்று கூறுகிறான். அலைகள் மீண்டும் சிரித்து கொண்டே காரணத்தை கூற தொடங்குகிறது. என்ன தான் என்னை கோடி மக்கள் நேசித்தாலும் ,என் மேல் அவர்களுக்கு காதல் இருந்தாலும் ,அதுவும் அவர்களின் சந்தோசத்திற்கு மட்டும் தான் நேசிக்கிறார்களே தவிர என்னையும்  ஒரு உயிராய் யாரும் மதிப்பதில்லை.

இந்த உலகத்திலேயே மிக பெரியது என்ன தெரியுமா? நாம்  மற்றவர்களின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.ஆனால் இங்கு என்னை சந்திக்க வருபவர்கள் என்னை நேசித்தாலும் ஒரு பயத்துடன் தான் என்னை காண்பார்கள்.

என்ன சொல்கிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான். அலைகள் உடனே நான் உனக்கு புரியும் வகையில் சொல்கிறேன் கேள் தனிமை காதலா. சரி சொல் சகியே என்றான். நான் எங்கு அவர்களை என் ஆழ்கடலுக்கு அடியில் இழுத்து சென்று விடுவேனோ என்ற பயத்தில் தான் இங்கு பல பேர் யோசிப்பார்கள். ஓஹோ அதுவும் சரி தான் என கூறினான்.

இவ்வுலகில் நீ யாரையாவது நம்புகிறாயா? என்று அலைகள் கேட்டது. ஆம் சகியே  நம்புகிறேன். என்ன தான் நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்ததாலும், நமக்கொன்று கிடைக்கையில் அது கிடைக்க கூடாது என நினைப்பவர்கள் தான் அதிகம். இவ்வுலகத்தில் நான் அனைவரையும் நேசிக்கிறேன். ஆனால் என்னை நேசிக்கும் ஒரு ஜீவன் யார் என்றால் என் அப்பா .