
இரக்கமில்லாதவன் இதயமே இல்லாதவன்

கொடுப்பவர் மேலோர், கொடுக்காதவர் கீழோராவார். கீழோரின் வரிசையில் விளங்கி வந்தவர் தான் பண்ணையார் பரமசிவம்.
ஒரு நாள்… அவரின் பெரிய வீட்டின் முன்னே நின்ற பிச்சைக் காரன் ஒருவன்,
அய்யா… அம்மா… என்று குரல் கொடுத்தான்.
பிச்சைக் காரனின் குரல் கேட்டவுடன், லொள்…. லொள்… என்று குரைத்துக் கொண்டே நாய் முன்னே வர, பரமசிவம் பின்னே வந்தார். பிச்சைக்காரனின் அலங்கோலத்தைக் கண்டு எரிச்சல் கொண்டவர்,
“உனக்கு என்ன வேண்டும்? ” என்று கேட்டார்.
“அய்யா பசியாயிருக்குது; சோறிருந்தா போடுங்க,உங்களுக்கு தர்மம் ஆகட்டும்.”
“தர்மமாவது, கர்மமாவது! சோறெல்லாம் இல்லை” என்றார். “
அய்யா… அய்யா… அப்படியெல்லாம் சொல்லாதீங்க, ஏதாவது போடுங்கய்யா’ மீண்டும் கெஞ்சினான்…. பிச்சைக்காரனை மறுபடியும் பார்த்த பரமசிவம், அவன் கையிலிருந்யத தூக்குச் சட்டியைப் பார்த்தார்.
” தூக்குச் சட்டியிலே என்ன வச்சிருக்கே?
“சோறுய்யா”
“அதை சாப்பிட வேண்டியது தானே. “
“காலை வேளைக்குச் சாப்பிட்டுக் கிர்றேன்பயா..”
“அப்புறம் எதுக்கு சோறு கேட்கிறே?”
“மத்தியானத்திற்கு”
“ஏண்டா! நாட்டிலே அவனவன் ஒரு வேளை சோத்துக்கே தாளம் போட்டுக் கிட்டிருக்கும்போது, நீ கெட்ட கேட்டிற்கு உனக்கு ரெண்டு நேரம் சோறு வேணுமா? அப்படியின்னா, மத்தியானம் வந்து பிச்சை கேட்க வேண்டியது தானே! காலையிலே ஏண்டா பிச்சை கேட்டு வந்திருக்கே?”
அய்யா! சிக்குன் குனியா காய்ச்சலினாலே கை காலெல்லாம் வீங்கி, மூட்டுக்கு மூட்டு வலிக்கிறதினாலே சரிவர நடக்க முடியலே. அதனால் தான் இரண்டு நேர சோத்தை ஒண்ணா வாங்கிட்டுப் போயி, சாப்பிடலாமின்னு தான் கேட்கிறேன்.