ஒன்றற்கொன்று அழகு

bookmark

வாழ்மனை தனக்கழகு குலமங்கை; குலமங்கை 
      வாழ்வினுக் கழகு சிறுவர்; 
வளர்சிறுவ ருக்கழகு கல்வி;கல் விக்கழகு 
      மாநிலம் துதிசெய் குணமாம்; 
சூழ்குண மதற்கழகு பேரறிவு; பேரறிவு 
      தோன்றிடில் அதற்க ழகுதான் 
தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை 
      சொல்லரிய பெரியோர் களைத் 
தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை 
      சாற்றுமிவை அழகென் பர்காண் 
சௌரி, மல ரோன், அமரர், முனிவர், முச்சுடரெலாம் 
      சரணம்எமை ரட்சி யெனவே.
ஆழ்கடல் உதித்துவரு விடம்உண்ட கண்டனே! 
      அண்ணல்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
-------------