காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்

bookmark

வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம், 
      மலர்நீலம் இவைஐந் துமே 
மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி 
      மனதிலா சையையெ ழுப்பும்; 
வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்; 
      மிகஅசோ கம்து யர்செயும்; 
வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
      மேவும்இவை செயும்அ வத்தை; 
நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
      நெட்டுயிர்ப் பொடுபி தற்றல், 
நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
      நேர்தல், மௌனம் புரிகுதல், 
அனைவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்! 
      அத்தனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!