பகை கொள்ளத் தகாதவர்

bookmark

மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு 
      மாறாத மர்மம் உடையோர், 
வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும் 
      மடையர்,மந் திரவா தியர், 
சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர் 
      சூழ்வயித் தியர்,க விதைகள் 
சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும் 
      சொப்பனந் தனில் ஆகிலும் 
நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந் 
      நானிலத் தென்பர் கண்டாய்! 
நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும் 
      நம்பனே! அன்பர் நிதி யே! 
அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!