நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்

சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்
சொல்லும்நல் நெல்லை எள்ளைத்
தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்
தொண்டரைத் தொழுதொ ழும்பை
நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்
நற்றமிழ்க் கவிவா ணரை
நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க
நயமுள்ள நாரியர் தமைப்
புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்
போர்வீர ரைத்தூ யரைப்
போதவும் பரிவோ டிதஞ்செய்ய மிகுபயன்
புகழ்பெறக் கொள்வர் கண்டாய்
அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!