நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்

bookmark

சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச் 
      சொல்லும்நல் நெல்லை எள்ளைத் 
தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத் 
      தொண்டரைத் தொழுதொ ழும்பை 
நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர் 
      நற்றமிழ்க் கவிவா ணரை 
நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க 
      நயமுள்ள நாரியர் தமைப் 
புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப் 
      போர்வீர ரைத்தூ யரைப் 
போதவும் பரிவோ டிதஞ்செய்ய மிகுபயன் 
      புகழ்பெறக் கொள்வர் கண்டாய்
அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே! 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!