முப்பத்திரண்டு அறங்கள்

bookmark

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும் 
      பிள்ளைகள் அருந்தி டும்பால், 
பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல் 
      பெண்போகம், நாவிதன், வணான், 
மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு 
      வாயின்உறை, பிணம்அ டக்கல், 
வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய் 
      வழங்கல், சுண் ணாம்பு தவுதல், 
சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில் 
      செய்தல், முன் னூலின் மனம், 
திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி, 
      தேவரா லாயம்,அ வுடதம்; 
அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன் 
      அன்னைசெயல்; அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே.