இல்லறம்

தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்
சன்மார்க்கம் உளமனை வியைத்
தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்
தனைநம்பி வருவோர் களைச்
சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்
தென்புலத் தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது
தான்புரிந் திடல்இல் லறம்;
சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்
தம்முடன் சரியா யிடார்!
அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்
கன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!