புராணம்

bookmark

தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
      சாரும்வா மனம், மச் சமே, 
சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த 
      சரிதமே, பிரமாண் டமும், 
தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்; 
      நெடியமால் கதை;வை ணவம் 
நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், 
      நீடிய புராணம் நான்காம்; 
கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே, 
      கமலா லயன்கா தைஆம்; 
கதிரவன் காதையே சூரிய புராணமாம்; 
      கனல் காதை ஆக்கி னேயம்; 
அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும் 
      அத்தனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!