புராணம்

தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
சாரும்வா மனம், மச் சமே,
சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த
சரிதமே, பிரமாண் டமும்,
தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;
நெடியமால் கதை;வை ணவம்
நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,
நீடிய புராணம் நான்காம்;
கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,
கமலா லயன்கா தைஆம்;
கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
கனல் காதை ஆக்கி னேயம்;
அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!