புகழ்ச்சி

பருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,
பாரில்மறை யாத நிதியம்,
பரிதிகண் டலராத நிலவுகண் டுலராத
பண்புடைய பங்கே ருகம்
கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்
கானில் உறை யாத சீயம்;
கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்
காசினியில் அருமை யாகும்!
தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,
சீரிதயம், ஈகை, வதனம்,
திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்
செகமெலாம் கொண்டா டவே
அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!