இலஞ்சி

bookmark

பாடல் 971
தனந்த தனதன தனந்த தனதன 
தனந்த தனதன ...... தனதான 


கரங்க மலமின தரம்ப வளம்வளை 
களம்ப கழிவிழி ...... மொழிபாகு 

கரும்ப முதுமலை குரும்பை குருகுப 
கரும்பி டியினடை ...... யெயின்மாதோ 

டரங்க நககன தனங்கு தலையிசை 
யலங்க நியமுற ...... மயில்மீதே 

அமர்ந்து பவவினை களைந்து வருகொடி 
யவந்த கனகல ...... வருவாயே 

தரங்க முதியம கரம்பொ ருததிரை 
சலந்தி நதிகும ...... ரெனவான 

தலம்ப ரவ மறை புலம்ப வருசிறு 
சதங்கை யடிதொழு ...... பவராழி 

இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப 
னிரண்டு புயமலை ...... கிழவோனே 

இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு 
இலஞ்சி மருவிய ...... பெருமாளே. 
பாடல் 972
தந்தன தான தனந்தன தானத் 
தந்தன தான தனந்தன தானத் 
தந்தன தான தனந்தன தானத் ...... தனதான 


கொந்தள வோலை குலுங்கிட வாளிச் 
சங்குட னாழி கழன்றிட மேகக் 
கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர் 

கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக் 
கண்கயல் மேனி சிவந்திட கோவைக் 
கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே

சந்திர ஆர மழிந்திட நூலிற் 
பங்கிடை யாடை துவண்டிட நேசத் 
தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன் 

சந்திர மேனி முகங்களு நீலச் 
சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச் 
சந்திர வாகு சதங்கையு மோசற் ...... றருள்வாயே 

சுந்தரர் பாட லுகந்திரு தாளைக் 
கொண்டுநல் தூது நடந்தவ ராகத் 
தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி 

தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச் 
சங்கரி மோக சவுந்தரி கோலச் 
சுந்தரி காளி பயந்தரு ளானைக் ...... கிளியோனே 

இந்திர வேதர் பயங்கெட சூரைச் 
சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக் 
கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே 

எண்புன மேவி யிருந்தவள் மோகப் 
பெண்திரு வாளை மணந்திய லார்சொற் 
கிஞ்சியளாவு மிலஞ்சி விசாகப் ...... பெருமாளே. 
பாடல் 973
தனந்த தனந்த தனந்த தனந்த 
தனந்த தணந்த ...... தனதானா 


சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு 
துரந்தெறி கின்ற ...... விழிவேலால் 

சுழன்று சுழன்று துவண்டு துவண்டு 
சுருண்டு மயங்கி ...... மடவார்தோள் 

விரும்பி வரம்பு கடந்து நடந்து 
மெலிந்து தளர்ந்து ...... மடியாதே 

விளங்கு கடம்பு விழைந்தணி தண்டை 
விதங்கொள் சதங்கை ...... யடிதாராய் 

பொருந்த லமைந்து சிதம்பெற நின்ற 
பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே 

புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணங்கொள் 
புரந்தரன் வஞ்சி ...... மணவாளா 

இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் 
குரும்பை மணந்த ...... மணிமார்பா 

இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று 
இலஞ்சி யமர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 974
தான தனந்த தான தனந்த 
தனா தனந்த ...... தனதான 


மாலையில் வந்து மாலை வழங்கு 
மாலை யநங்கன் ...... மலராலும் 

வாடை யெழுந்து வாடை செறிந்து 
வாடை யெறிந்த ...... அனலாலுங் 

கோல மழிந்து சால மெலிந்து 
கோமள வஞ்சி ...... தளராமுன் 

கூடிய கொங்கை நீடிய அன்பு 
கூரவு மின்று ...... வரவேணும் 

கால னடுங்க வேலது கொண்டு 
கானில் நடந்த ...... முருகோனே 

கான மடந்தை நாண மொழிந்து 
காத லிரங்கு ...... குமரேசா 

சோலை வளைந்து சாலி விளைந்து 
சூழ மிலஞ்சி ...... மகிழ்வோனே 

சூரிய னஞ்ச வாரியில் வந்த 
சூரனை வென்ற ...... பெருமாளே.