ஊடல் வேம்பாச்சே!

bookmark

குடும்பப் பகையால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதலன் பகையைப் பொருட்படுத்தாமல் அவள் காட்டுக்குவரும்பொழுது அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். "சிறிதுகாலம் நமது உறவை முறித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விபரீதம் விளையும்" என்று எச்சரிக்கிறான்.

ஆண்: சின்னச் செருப்பு மாட்டி
சிறு கலயம் கஞ்சி கொண்டு 
வருண முழி முழிச்சு
வாராளையா வடகாடு

பெண்: பாதை பிரிவாச்சே!
பக்கப் புளி ஒண்டாச்சே 
ஊடாலே வேம்பாச்சே 
உனக்கும் எனக்கும் பகையாச்சே

வட்டாரவழக்கு: ஊடாலே-நடுவில்; புளி-புளியமரம்; ஒண்டு-ஒன்று.

சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு 
இடம்: தூத்துக்குடி வட்டாரம்.
--------