ஊடல் வேம்பாச்சே!

குடும்பப் பகையால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதலன் பகையைப் பொருட்படுத்தாமல் அவள் காட்டுக்குவரும்பொழுது அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். "சிறிதுகாலம் நமது உறவை முறித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விபரீதம் விளையும்" என்று எச்சரிக்கிறான்.
ஆண்: சின்னச் செருப்பு மாட்டி
சிறு கலயம் கஞ்சி கொண்டு
வருண முழி முழிச்சு
வாராளையா வடகாடு
பெண்: பாதை பிரிவாச்சே!
பக்கப் புளி ஒண்டாச்சே
ஊடாலே வேம்பாச்சே
உனக்கும் எனக்கும் பகையாச்சே
வட்டாரவழக்கு: ஊடாலே-நடுவில்; புளி-புளியமரம்; ஒண்டு-ஒன்று.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம்.
--------