ஊதிமலை

bookmark

பாடல் 611
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தானதன தான தந்த தானதன தான தந்த 
தானதன தான தந்த ...... தனதான 


ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த 
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா 

ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று 
ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே 

பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து 
பூரணசி வாக மங்க ...... ளறியாதே 

பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து 
போகமுற வேவி ரும்பி ...... மடியேனை 

நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து 
நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச 

நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர 
நீலமயி லேறி வந்த ...... வடிவேலா 

ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து 
ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர 

ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த 
ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே. 
பாடல் 612
தான தனத்தத் தனத்த தந்தன 
தான தனத்தத் தனத்த தந்தன 
தான தனத்தத் தனத்த தந்தன ...... தனதான 


கோதி முடித்துக் கனத்த கொண்டையர் 
சூது விதத்துக் கிதத்து மங்கையர் 
கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே 

கோழை மனத்தைக் கெடுத்து வன்புல 
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல் 
கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் ...... புரிவாயே 

நாத நிலைக்குட் கருத்து கந்தருள் 
போதக மற்றெச் சகத்தை யுந்தரு 
நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே 

நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது 
தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு 
நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் ...... வடிவேலா 

தோதிமி தித்தித் திமித்த டிங்குகு 
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி 
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ ...... னிசையோடே 

சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி 
ரான துறத்தற் கிரக்க முஞ்சுப 
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் ...... புரிவோனே 

ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ 
காரண பத்தர்க் கிரக்க முந்தகு 
ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ...... ரொளியோனே 

ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன 
காபர ணத்திற் பொருட் பயன்றரு 
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் ...... பெருமாளே.