எதிர்ப் பாட்டு

ஆத்தாள் அறியாமல் தன்னுடன் வந்து விடும்படி கூறுகிறான் காதலன். அவள் அவனுக்கு பதில் சொல்கிறாள். அதன்படி அவனால் செய்ய முடியுமா? இவ்வாறே பாட்டும் எதிர்ப்பாட்டுமாக உரையாடல் செல்லுகிறது.
ஆண் :
அஞ்சு ரூபா தாரேன்
அரக்கு போட்ட சேலை தாரேன்-உன்
ஆத்தாள் அறியாம நீ
வாக்கப்பட்டு வந்திரடி
பெண்:
அஞ்சு ரூபா வேண்டாம்
அரக்குபட்டு சேலை வேண்டாம்
தட்டான் அறியாம-நீ
தாலி பண்ணி வந்திரடா
ஆண :
தட்டான் அறியாம
தாலி பண்ணி நானும் வந்தா
அடுப்பங் கட்டு இல்லாமல்-நீ
பருப்புச் சோறு பொங்கி வாடி
பெண் :
அடுப்பங்கட்டி மூணில்லாம
பருப்புச் சோறு பொங்கி வந்தா
நாவுல பட்டிராம-நீ
நவட்டி முழுங்கிரணும்.
சேகரித்தவர். S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
-------------