எதிர்ப் பாட்டு

bookmark

ஆத்தாள் அறியாமல் தன்னுடன் வந்து விடும்படி கூறுகிறான் காதலன். அவள் அவனுக்கு பதில் சொல்கிறாள். அதன்படி அவனால் செய்ய முடியுமா? இவ்வாறே பாட்டும் எதிர்ப்பாட்டுமாக உரையாடல் செல்லுகிறது.

ஆண் : 
அஞ்சு ரூபா தாரேன்
அரக்கு போட்ட சேலை தாரேன்-உன் 
ஆத்தாள் அறியாம நீ 
வாக்கப்பட்டு வந்திரடி

பெண்: 
அஞ்சு ரூபா வேண்டாம்
அரக்குபட்டு சேலை வேண்டாம் 
தட்டான் அறியாம-நீ 
தாலி பண்ணி வந்திரடா

ஆண : 
தட்டான் அறியாம
தாலி பண்ணி நானும் வந்தா 
அடுப்பங் கட்டு இல்லாமல்-நீ 
பருப்புச் சோறு பொங்கி வாடி

பெண் : 
அடுப்பங்கட்டி மூணில்லாம
பருப்புச் சோறு பொங்கி வந்தா
நாவுல பட்டிராம-நீ 
நவட்டி முழுங்கிரணும்.

சேகரித்தவர். S.M. கார்க்கி 
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
-------------