கதிர்காமம்

bookmark

பாடல் 636 
ராகம் - குந்தல வராலி; தாளம் - ஆதி 

தனதனன தான தனதனன தான 
தனதனன தான ...... தனதான 


திருமக ளுலாவு மிருபுய முராரி 
திருமருக நாமப் ...... பெருமாள்காண் 

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் 
தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண் 

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு 
மரகதம யூரப் ...... பெருமாள்காண் 

மணிதரளம் வீசி யணியருவி சூழ 
மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் 

அருவரைகள் நீறு படஅசுரர் மாள 
அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் 

அரவுபிறை வாரி விரவுசடை வேணி 
அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் 

இருவினையி லாத தருவினைவி டாத 
இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் 

இலகுசிலை வேடர் கொடியினதி பார 
இருதனவி நோதப் ...... பெருமாளே. 
பாடல் 637 
தனன தான தானான தனன தான தானான 
தனன தான தானான ...... தனதான 


அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி 
அடைவில் ஞாளி கோமாளி ...... அறமீயா 

அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர் 
அருளி லாத தோடாய ...... மருளாகிப் 

பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு 
பருவ மேக மேதாரு ...... வெனயாதும் 

பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத 
பரிசில் தேடி மாயாத ...... படிபாராய் 

இலகு வேலை நீழ்வாடை யெரிகொள் வேலை மாசூரி 
லெறியும் வேலை மாறாத ...... திறல்வீரா 

இமய மாது பாகீர திநதி பால காசார 
லிறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா 

கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத 
கதிர காம மூதூரி ...... லிளையோனே 

கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான 
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
பாடல் 638 
ராகம் - காம்போதி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2 

தனத்தத் தனதான தானன 
தனத்தத் தனதான தானன 
தனத்தத் தனதான தானன ...... தனதான 


உடுக்கத் துகில்வேணு நீள்பசி 
யவிக்கக் கனபானம் வேணுநல் 
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை 

ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் 
இருக்கச் சிறுநாரி வேணுமொர் 
படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் 

கிடைத்துக் க்ருஹவாசி யாகிய 
மயக்கக் கடலாடி நீடிய 
கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் 

க்ருபைச்சித் தமுஞான போதமு 
மழைத்துத் தரவேணு மூழ்பவ 
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே 

குடக்குச் சிலதூதர் தேடுக 
வடக்குச் சிலதூதர் நாடுக 
குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் 

குறிப்பிற் குறிகாணு மாருதி 
யினித்தெற் கொருதூது போவது 
குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ 

அடிக்குத் திரகார ராகிய 
அரக்கர்க் கிளையாத தீரனு 
மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் 

றருட்பொற் றிருவாழி மோதிர 
மளித்துற் றவர்மேல் மனோகர 
மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே. 
பாடல் 639 
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - திஸ்ர்ருபகம் - திஸ்ரநடை (7 1/2) 
(எடுப்பு - /3 0) 

தனன தான தத்த ...... தனதான 


எதிரி லாத பத்தி ...... தனைமேவி 

இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும் 

இதய வாரி திக்கு ...... ளுறவாகி 

எனது ளேசி றக்க ...... அருள்வாயே 

கதிர காம வெற்பி ...... லுறைவோனே 

கனக மேரு வொத்த ...... புயவீரா 

மதுர வாணி யுற்ற ...... கழலோனே 

வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே. 
பாடல் 640
ராகம் - தோடி; தாளம் - ஆதி (2 களை) 

தனதன தனதன தனதன தனதன 
தானத் தனந்தந் ...... தனதான 


கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர் 
காமத் தரங்கம் ...... மலைவீரா 

கனகத நககுலி புணரித குணகுக 
காமத் தனஞ்சம் ...... புயனோட 

வடசிக ரகிரித விடுபட நடமிடு 
மாவிற் புகுங்கந் ...... தவழாது 

வழிவழி தமரென வழிபடு கிலனென 
வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான் 

அடவியி ருடியபி நவகும ரியடிமை 
யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே 

அயிலவ சமுடன ததிதிரி தருகவி 
யாளப் புயங்கொண் ...... டருள்வோனே 

இடமொரு மரகத மயில்மிசை வடிவுள 
ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே 

இதமொழி பகரினு மதமொழி பகரினு 
மேழைக் கிரங்கும் ...... பெருமாளே. 
பாடல் 641 
தனதனன தானத்த தனதனன தானத்த 
தனதனன தானத்த ...... தனதான தானனா 


சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட 
தனமசைய வீதிக்குள் ...... மயில்போ லுலாவியே 

சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்கு பாசுத்தர் 
தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே 

உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்கு 
முரியவர் மகாதத்தை ...... யெனுமாய மாதரார் 

ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு 
முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே 

இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி 
யெழுதரிய காயத்ரி ...... யுமையாள் குமாரனே 

எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து 
இதணருகு சேவிக்கு ...... முருகா விசாகனே 

அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு 
மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே 

அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த 
அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே. 
பாடல் 642 
ராகம் - காபி; தாளம் - ஆதி - கண்டநடை (20) 
(எடுப்பு - அதீதம்) 

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா 
தனத்தா தனத்தா ...... தனதான 


சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே 
சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச் 

சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய் 
தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச் 

சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய் 
செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச் 

சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய் 
திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே 

புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார் 
பொரத்தா னெதிர்தே ...... வருபோது 

பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார் 
பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின் 

கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார் 
கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக் 

கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே 
கதிர்க்காம முற்றார் ...... முருகோனே 
பாடல் 643 
தனதனா தத்தனத் தனதனா தத்தனத் 
தனதனா தத்தனத் ...... தனதான 


சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற் 
சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய 

சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட் 
டருபரா சத்தியிற் ...... பரமான 

துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச் 
சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு 

துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற் 
சுகசெர்ரு பத்தையுற் ...... றடைவேனோ 

புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற் 
புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன் 

புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப் 
புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே 

கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக் 
கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக் 

கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற் 
கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே. 
பாடல் 644 
தானதன தத்தத்த தானதன தத்தத்த 
தானதன தத்தத்த ...... தனதான 


பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப 
யோதர நெருக்குற்ற ...... இடையாலே 

பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப 
பாணவிழி யிற்பொத்தி ...... விடுமாதர் 

காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த 
காதில்முக வட்டத்தி ...... லதிமோக 

காமுக னகப்பட்ட வாசையைம றப்பித்த 
கால்களைம றக்கைக்கும் ...... வருமோதான் 

தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ 
சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன் 

சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி 
கோணசயி லத்துக்ர ...... கதிர்காம 

வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு 
மேகலை யிடைக்கொத்தி ...... னிருதாளின் 

வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை 
வேல்களில கப்பட்ட ...... பெருமாளே. 
பாடல் 645
தனதனா தத்த தனதனா தத்த 
தனதனா தத்த ...... தனதான 


மருவறா வெற்றி மலர்தொடா விற்கை 
வலிசெயா நிற்கு ...... மதனாலும் 

மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட 
மதிசுடா நிற்கு ...... மதனாலும் 

இருகணால் முத்த முதிரயா மத்தி 
னிரவினால் நித்த ...... மெலியாதே 

இடருறா மெத்த மயல்கொளா நிற்கு 
மிவளைவாழ் விக்க ...... வரவேணும் 

கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி 
கலவிகூர் சித்ர ...... மணிமார்பா 

கனகமா ணிக்க வடிவனே மிக்க 
கதிரகா மத்தி ...... லுறைவோனே 

முருகனே பத்த ரருகனே முத்தி 
முதல்வனே பச்சை ...... மயில்வீரா 

முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு 
முறியவேல் தொட்ட ...... பெருமாளே. 
பாடல் 646 
ராகம் - குந்தல வராலி; தாளம் - அங்கதாளம் (7) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 

தானதன தானத் ...... தனதான 


மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும் 

மாதவமெ ணாமற் ...... றிரிவாரும் 

தீதகல வோதிப் ...... பணியாரும் 

தீநரக மீதிற் ...... றிகழ்வாரே 

நாதவொளி யேநற் ...... குணசீலா 

நாரியிரு வோரைப் ...... புணர்வேலா 

சோதிசிவ ஞானக் ...... குமரேசா 

தோமில் கதிர்காமப் ...... பெருமாளே. 
பாடல் 647 
தனன தான தான தத்த தனன தான தான தத்த 
தனன தான தான தத்த ...... தனதான 


முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி 
முனியு மார வார முற்ற ...... கடலாலே 

முடிவி லாத தோர் வடக்கி லெரியு மால மார்பி டத்து 
முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே 

வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும் 
வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே 

விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற 
விகட மாதை நீ யணைக்க ...... வரவேணும் 

கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த 
கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா 

கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி 
ககன மேவு வாளொ ருத்தி ...... மணவாளா 

அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க 
அரிய ஞான வாச கத்தை ...... யருள்வோனே 

அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி 
அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே. 
பாடல் 648 
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தனதனன தான தந்த தனதனன தான தந்த 
தனதனன தான தந்த ...... தனதான 


வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று 
மடிபிடிய தாக நின்று ...... தொடர்போது 

மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று 
வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள் 

கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து 
கரியபுன லேசொ ரிந்து ...... விடவேதான் 

கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு 
கடுகிவர வேணு மெந்தன் ...... முனமேதான் 

பரகிரியு லாவு செந்தி மனையினுட னேயி டும்பன் 
பழநிதனி லேயி ருந்த ...... குமரேசா 

பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற 
பதமடியர் காண வந்த ...... கதிர்காமா 

அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை 
யணிவர் சடை யாளர் தந்த ...... முருகோனே 

அரகரசி வாய சம்புலத குருபரகு மார நம்பு 
மடியர்தமை யாள வந்த ...... பெருமாளே. 
பாடல் 649 
தனத்த தானன தனத்த தானன 
தனத்த தானன தனத்த தானன 
தனத்த தானன தனத்த தானன ...... தனதான 


தொடுத்த வாளென விழித்து மார்முலை 
யசைத்து மேகலை மறைத்து மூடிகள் 
துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர் 

சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ 
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ் 
துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப் 

படுத்த பாயலி லணைத்து மாமுலை 
பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ் 
கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே 

பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை 
வெளுத்து வாய்களு மலத்தி னாயென 
பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ...... ருழல்வேனோ 

வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை 
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு 
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே 

விதித்து ஞாலம தளித்த வேதனை 
யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல் 
விழித்து காமனை யெரித்த தாதையர் ...... குருநாதா 

அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி 
நடுக்க மாமலை பிளக்க வேகவ 
டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ...... மயில்வீரா 

அறத்தில் வாழுமை சிறக்க வேயறு 
முகத்தி னோடணி குறத்தி யானையொ 
டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.