கவுரவமான மனிதன்

bookmark

ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல புகழ் இருந்தது. அவரிடம் நிறைய மாணவர்கள் இருந்தனர். அவருடைய புகழையும், அவரிடம் நிறைய சீடர்கள் இருப்பதைக் கண்டு மற்றொரு துறவி பொறாமைப்பட்டார். 

 பொறாமைக்கார துறவி வேண்டுமென்றே புகழ்வாய்ந்த துறவியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்து துறவியிடம் உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை. 

 என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா? என்று கேட்டார். என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன் என்றார். உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆணவத்துடன் புகழ்பெற்ற துறவியை நோக்கி வந்தார். 

 இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள் என்றார். துறவியும் அவ்வாறே சென்றார். ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள் என்றார். அவரும் போனார். சரி, நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி என்றார்.