காதோலை

புது மணப் பெண்ணுக்குத் தன் முதல் மாதக் கூலியில் கணவன் காதோலை வாங்கி வந்தான். அவனுடைய சட்டைப் பைக்குள் காதோலை கிடந்ததைக் கண்டெடுத்த மனைவி, இது எப்படி அங்கு வந்ததென்று பொய்க் கோபத்தோடு கேட்கிறாள். அவன் `பாகற் கொடி பந்தலில் காதோலை காய்ப்பது உனக்குத் தெரியாதா?` என்று கேட்கிறான்.
பெண் : சாய வேட்டிக்காரா-நீ
சாதித் துரை மகனே
வல்லவாட்டு சேப்புக் குள்ள
வந்த தென்ன காதோலை?
ஆண் : தண்ணிக் குடத்தாலென்
தாக்த்தைத் தீர்த்த தங்கம்
பாவக் கொடி பந்தலில்
பழுத்ததடி காதோலை.
வட்டார வழக்கு : சேப்பு-சட்டைப்பை ; பாவக் கொடி-பாகற் கொடி.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : நெல்லை மாவட்டம்.
---------