குதிரைக் கடிவாளமும், மொட்டையும்

ஒரு ஊரில் ஒரு ராஜா வீரத்தில் வல்லவர். தனது நாட்டை சீரும் சிறப்புமாக அரசாட்சி செய்து வந்தார். அவருக்கு ஒரு
மந்திரி இருந்தார். ராணியும் மந்திரியின் மனைவியும் நெருங்கிய தோழிகள்.;ஒருநாள் மாலையில்
அந்தப்புரத்தில் ராஜாவுக்கும் ராணிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ராஜா எவ்வளவோ கூறியும் ராணி
சமாதானமாகவில்லை.;உன் கோபம் தணிய நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் ராஜா.
நீங்கள் ஒரு குதிரையைப் போலக் கடிவாளம் கட்டிக்கொண்டு, என்னைச் சுமந்துகொண்டு குதிரையைப் போலவே
கனைக்கவேண்டும் என்றாள். வேறு வழி இல்லாததால் ராஜாவும் அதே போல் செய்தார். ராணியின் கோபம்
தணிந்தது. ;ராணியின் தோழியாகிய மந்திரியின் மனைவி இதைப் பார்த்து விட்டாள். அவளும், தன்
கணவரிடம் எந்தக் காரணமும் இல்லாமல் கோபித்துக்கொண்டாள். உன் கோபம் தணிய நான் என்ன
செய்ய வேண்டும் என்று கேட்டார் மந்திரி. ;நீங்கள் உங்கள் தலையினை மொட்டையடித்துக் கொண்டு
என்னைச் சுற்றி வந்து என் காலில் விழுந்து வணங்க வேண்டும்! என்றாள் அவள். வேறு வழி இல்லாததால்
மந்திரி, தன் தலையினை மொட்டையடித்துக் கொண்டார். தன் மனைவியைச் சுற்றிவந்து அவள் காலில் விழுந்து
வணங்கினார்.;மறுநாள் அரசபைக்கு வந்த மந்திரியைப் பார்த்த ராஜா, என்ன மந்திரியாரே! திடீரென்று
மொட்டைபோட்டுள்ளீர்? என்றார். அதற்கு மந்திரி, ராஜா! தாங்கள் குதிரையைப் போலக்
கனைத்ததால்தான் நான் திடீரென்று மொட்டைபோட வேண்டியதாயிற்று என்றார்அரசவையில்
இருந்தவர்களுக்கு ஏதும் புரியவில்லை. பின்னாளில் இதன் காரணத்தைத் தெரிந்துக் கொண்டவர்கள் மந்திரிக்குத்
தலைமுடி வளரும் வரை அவரைக் கேலி செய்தனர். குதிரை கனைக்கும் சப்தத்தைக் கேட்கும்
போதெல்லாம் ராஜாவை நினைத்துச் சிரித்தனர்.