குயிலு போயி எங்கடையும்

அவளுக்கு அவள் கணவன் நந்தவனம். அந்த நந்தவனத்தில் குடியிருக்கும் குயிலும், மயிலும் போன்றவள் அவள். நந்தவனத்திற்கு சேதம் வந்து விட்டது ; நந்தவனம் பட்டுப் போய் விட்டது. அவள் நந்தவனம் போன்ற கணவனை இழந்தபின்பு எங்கே போவாள்? அவள் கதி என்ன? என்று எண்ணி வேதனை யடைகிறாள்.
குட்ட புளிய மரம்
குயிலடையும் நந்தவனம்
குட்டை மரம் பட்டுப் போச்சு
குயிலு போய் எங்கடையும்
மட்ட புளிய மரம்
மயிலடையும் நந்தவனம்
மட்ட மரம் பட்டுப் போச்சு
மயிலு போயி எங்கடையும்
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: கொங்கவேம்பு, தருமபுரி மாவட்டம்.
-----------