கூப்பிடுவார் யாருமில்லை

bookmark

தாயும் தந்தையும் இறந்து விட்டனர். மகளுக்கு திருமணமாகவில்லை. தன்னைத் தகுந்த வரன் பார்த்து இனி யார் மணம் செய்து வைப்பார்கள் எண்றெண்ணி வருந்துகிறாள்.

மாரியம்மன் கோயிலிலே
மங்கை குளி குளிச்சேன்
மாதுளங்கா பட்டுடுத்தி
மாரியை வணங்கி வந்தேன்
மனையும் எதுராச்சி
மலங்கழுகு சயணமாச்சி-நான்
கொட்டியும் தண்ணீராய்
கொளத்திலே பூத்திருந்ததன்
குயிலா குணமறிஞ்சி
கூப்பிடுவார் யாருமில்லை
காளியம்மன் கோயிலிலே
கன்னி குளி குளிச்சி
கைலங்கிரி பட்டுடுத்தி
காளியை வணங்கி வந்ததன்
கானாறு எதிராச்சி
காக்கா சயண மாச்சி
தாமரையும் தண்ணீரால்
தடாகத்தில் பூத்திருந்ததன்
மயிலா குணமறிஞ்சி
வரவழைப்பார் யாருமில்லை.

வட்டார வழக்கு: சயணமாச்சி-சகுனமாச்சு ; பூத்திருந்தன-பூத்திருந்தேன்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அருர், தருமபுரி மாவட்டம்.
------------