
கொக்கு பாரு கரையிலே

கொக்கு பாரு கரையிலே
காத்திருக்கு வெயிலிலே
எதுக்கிருக்கு கரையிலே
மீனுக்காது புரியலே
நீரை விட்டு வெளியிலே
மீனும் துள்ளி வரையிலே
கொத்திக்கிச்சா லபக்குனு
மீன் கொக்கு வாயிலே
மக்கு மீனு கொக்குடன்
மல்லு கட்ட முடியல
ஏமாளி மீனுதான்
இரையாகிப் போனதாம்
காத்திருந்து கடமையை
கச்சிதமா முடிக்கணும்
நேரம் பார்த்து கொக்குபோல
நெனச்சத நாம் முடிக்கனும்