கொடுங்குன்றம்

பாடல் 621
தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான
அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே
அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் ...... கொங்கையாலே
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ...... பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் ...... றின்புறாதோ
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக்
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் ...... துன்றுசோலை
கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் ...... தம்பிரானே.
பாடல் 622
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
தத்தத்த தந்ததன
--------- 3 முறை ---------- ...... தந்ததான
எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது
குத்தித் திறந்துமலை
யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி
முத்துச் செறிந்தவட
மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி
னிற்கொத்து மங்குசநெ ...... ருங்குபாகர்
எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப
தைக்கக்க டிந்துமிக
இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு
முட்கத்தி ரண்டிளகி
யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு
டைத்துச்சி னந்துபொரு ...... கொங்கையானை
பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி
யொக்கத்து வண்டமளி
புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்
செக்கச்சி வந்தமுது
பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய
முத்தத்து டன்கருணை ...... தந்துமேல்வீழ்
புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்
தட்டுப்ப டுந்திமிர
புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய
சட்டைக்கு ரம்பையழி
பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி
னிர்த்தச் சரண்களைம ...... றந்திடேனே
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத
திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கத்த குந்தகுர்த ...... திந்திதீதோ
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குக்கு குங்குகுகு ...... என்றுதாளம்
முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு
டுக்கைப்பெ ரும்பதலை
முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம
கத்திக்க ளும்பரவ
முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய
மிக்கக்க வந்தநிரை ...... தங்கியாட
முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர
வுக்ரப்பெ ருங்குருதி
முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வே
டிக்கத்து ணிந்ததிர
முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி
வெட்டிக்க ளம்பொருத ...... தம்பிரானே.