கொண்டவனைக் கூட தோத்தேன்

அவள் வெளியூர் சென்று வர மிகயும் ஆசைப்படுகிறாள். மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவன் அவளை, மாயவரம், கும்பகோணம் முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்றான். ஆனால் சென்ற இடத்தில் பயங்கரக் காலராவினால் தனது தாலியை இழப்போம் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை. தான் ஆசையுடன் வந்த இந்தப் பிரயாணம் இன்பப் பிரயாணமாக இல்லாது பெருந் துன்பத்தைக் கொடுக்கக்கூடியதாக அமைந்ததை எண்ணி அழுகிறாள்.
மாயவரம் சங்துகு நதி
மயிலாட்டம் பார்க்கப் போனேன்
மாறா பதக்கம் தோத்தேன்
மன்னவனே கூட தோத்தேன்
கும்பகோணம் சங்கு நதி
குயிலாட்டம் பார்க்கப் போனேன்
கொத்து சரம் தோத்தேன்
கொண்டவனைக் கூட தோத்தேன்
வட்டார வழக்கு: கொத்து சரம், மாறா பதக்கம்-தாலி.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
------------