சின்னப்பட முடியலையே

மருமகள் பருத்தி ஆட்டி கொட்டையைப் பிரிக்க மணையிலுட்காருகிறாள். இந்த வேலை செய்தால், அவள் கையில் கொஞ்சம் காசு சேரும். இதைக் கண்ட மாமியாருக்குப் பொறுக்கவில்லை. “வீட்டு வேலை செய்யாமல் வீண் வேலை செய்கிறாயே ” என்று திட்டுகிறாள்,மருமகள் தன்னுடைய வருத்தத்தை மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுகிறாள்.
நாடன் பருத்திக் கொட்டை
நானாட்ட முடியலியே
நாதேரி முண்டகிட்ட
சின்னப்பட முடியலியே
உக்கம் பருத்திக் கொட்ட
நானாட்ட முடியலியே
ஊதேரி முண்டகிட்ட
சின்னப்பட முடியலியே
உதவியவர் : பெருமாயி; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
-----------